நிச்சாமம்

 
rss-top-right.jpg

English Pages
  • World Socialist Web Site
  • GROUNDVIEWS
  • VIKALPA
  • LANKA HERMES
  • FEDERALIDEA
  • TRANSCURRENTS
  • SAHASAMVADA
  • VOICES OF RECONCILIATION
  • HUMAN RIGHTS WATCH
  • நினைவுகளில்
    ஈழத்தின் கன்பொல்லை கிராமத்தில், சாதி ஒழிப்புப் போரில் முன்னின்று போராடி வெடிகுண்டுகளைத் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தலித் போராளிகள்: கி.வேலும் மயிலும், மா.சீவரட்ணம், க.செல்வராசா
    உங்கள் பக்கங்களில் இணைக்க கீழ் உள்ள நிரலியைப் பிரதிசெய்து ஒட்டுக!

    Nichchamam



    ஏற்கனவே
    சொல்லப்பட்டவை
    வடிவமைப்பு

    BLOGGER

    சுட்டிகள்
    வருகைக்கு நன்றி
    தீர்ப்பு
    Tuesday, February 27, 2007
    நுகத்தடி நாட்கள்
    சுகன் கவிதைகள்

    தீர்ப்பு

    ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள்
    இடுப்பிலிருந்து இறங்கி
    போராடப் போனது ஒன்று
    இங்கு ஓடி வந்தது ஒன்று

    நீதி கேட்டுத் தாய் ஓடினாள்;
    மன்னன் சாலமன் சபையில் விசித்திரம் நிகழ்ந்தது

    'கத்தியும் தீர்ப்பு எழுதும் பேனையையும்
    வருபவர்களிடம் கொடு” என்று கூறி
    மன்னன் சாலமன் 'எயர் போட்” போய் விட்டதாக
    வாயிற் காவலன் கூறினான்
    தாய் திகைத்தாள்

    வாயிற் காவலன் சாதாரணமாக
    தாயிடம் கேட்டான்
    'இன்றைய நாணய மாற்று விகிதம் என்ன?
    நூறு பிராங் எத்தனை ரூபாய்?”

    Labels: , ,


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 2/27/2007 11:56:00 AM   0இது பற்றி...!
    நேற்று இருந்தோம்
    நுகத்தடி நாட்கள்


    சுகன் கவிதைகள்

    நேற்று இருந்தோம்

    கடற் குதிரைகளில்

    நட்சத்திர மீன்களை அள்ளி

    வீசிச்சென்ற கடற் தேவதை

    என்னைப் பெற்று அப்பாவிடம்

    கொடுத்ததாக சொல்வாள் என் அம்மா



    அலைமேலால் முரல் பாய்ந்து

    அதில் ஒன்று அணியத்திருந்த

    பாட்டனின் வயிற்றை

    கிழித்ததாகக்

    கதை சொன்ன தாயே

    என்னைப் பெற்ற தேவதையே



    எங்களிடம் கடல் இருந்தது

    கரை இருந்தது

    நட்சத்திரங்கள் இருந்தது

    நிறைந்து

    காலங்கள் எமக்கிருந்தது



    இன்று கடல், கரை, நட்சத்திரங்கள்

    எவரிடமுமில்லை

    காலங்களும் நாங்களும்

    கள்வர்களிடம்



    (தேனீ, வைகாசி-ஆனி 1992)

    Labels: , ,


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 2/27/2007 11:04:00 AM   0இது பற்றி...!
    இறந்தவனும் சுமந்தவனும்
    நுகத்தடி நாட்கள்


    சுகன் கவிதைகள்


    இறந்தவனும் சுமந்தவனும்

    'எட நாயே
    வந்திருக்கிறது இந்தியன் ஆமியடா
    வந்தா சுட்டுப் போடுவாங்களடா
    உந்த ஊமல் கொட்டையை எறிஞ்சு போட்டு வீட்டை வாடா”
    தந்தை சொல்லுக் கேட்காத
    சென்றியில் நின்ற சின்னப்பொடியன்
    திரும்பி வீட்டுக்கு வரவில்லை

    ' ஆமி வந்தா நாங்க உங்கண்டை.............. யையே
    கழட்டி எறியிறது? எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போங்கோடா விழுவாரே”
    என்று சொன்ன மணியண்ணையும் வரவில்லை
    ' இனிக் கதைச்சாச் சுடுவோம்”
    என்ற சண்டியரும் வரவில்லை.
    'அம்மா நான் திரும்பி வந்தா லெப்டினன்ட் கேணல்
    இல்லையெண்டா வீர மரணம்”
    சொல்லிப்போன தம்பியும் வரவில்லை

    இவர்கள் தங்கள் மனங்களில் வாழ்வதாகச்
    சொன்ன அடுத்து சுமந்தவனை
    சுமந்த இன்று வந்து சேர்ந்த அண்ணனைக் கேட்டேன்.

    'நீங்கள் எப்படித் தப்பி வந்தனீர்கள்?”
    அறைமுழுவதும் பார்த்துவிட்டுச் சொன்னார்

    'அஞ்சு வரிசமா இஞ்சை இருக்கிறாய்
    ஒரு வயிரவர் படம் இல்லாமை”

    Labels: , ,


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 2/27/2007 10:53:00 AM   0இது பற்றி...!

    மேலும் அறிய

    Name: NICHAMAM
    Home:
    About Me:
    See my complete profile
    இனி

    புதுவிசை

    கேளிர்
    இலங்கையிலிருந்து

    கூட்டுமுகப்புக்கள்
    • :: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines
    • ”மாற்று!
    • Thiratti.com Tamil Blog Aggregator
    காலக் கூடை
    FEED/வாசகராகுங்கள்!!

    எங்கள் செய்தியோடையின் வாசகராகுங்கள்

    Add to Google Reader or Homepage

    Add to My AOL Add to Excite MIX

    NICHAMAM

    [Valid Atom 1.0]

    "Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" (Dr. B.R. Ambedkar)